ஆட்சியை கலைக்க சூழ்ச்சிகள் செய்தால் ஜெ.ஆன்மா மன்னிக்காது... அமைச்சர் ஜெயக்குமார் சாபம்
ஆட்சியை கலைக்கும் வகையில் ஏதேனும் சூழ்ச்சிகள் செய்தால் அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: ஆட்சியை கலைக்கும் வகையில் ஏதேனும் சூழ்ச்சிகள் யாராவது செய்தால் அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது என்று நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வி்மான நிலையத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றார். அப்போது அவர் கூறுகையில், நியாயமான கோரிக்கைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்வு காணப்படும்.

ஜிஎஸ்டி இல்லாத பொருள்களுக்கு வரி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
அதிமுக துணை பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை.எனவே அவரது நியமனங்கள் செல்லாது. ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சிகளை யார் செய்தாலும் அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications