சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ‘டம்மி’ பதவிக்கு மாற்றப்பட்டது ஏன்?
சென்னை: சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் இருந்து வந்தார். இவர் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டு சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த ஜெ.கே. திரிபாதி சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த டி.கே.ராஜேந்திரன் சென்னை நகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா பிறப்பித்துள்ளார்.

டம்மி பதவிக்கு மாற்றம்
2012ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வந்து ஜார்ஜ் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாநகர ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு, கமிஷனர் ஜார்ஜை மிகவும் ‘டம்மி' பதவியான சிறைத்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

குவிந்த புகார்கள்
கடந்த சில நாட்களாகவே சென்னை நகர போலீஸ் கமிஷனர் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணமிருந்தன. அதிகாரவர்க்கத்திற்கு வேண்டியவர்கள் தொடர்பான சில பிரச்னைகளில் கமிஷனர் ஜார்ஜ் தவறான நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக உளவுத்துறை விசாரணையும் நடைபெற்று வந்தது. விசாரணையை தொடர்ந்து ஜார்ஜ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

டி.கே.ராஜேந்திரன்
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சி கூறும் உத்தரவுகளை நிறைவேற்றி தருவார் என்பதற்காக அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கவுரவத்திற்குரிய சென்னை நகர போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன், சென்னையில் ஏற்கனவே போக்குவரத்து துணை, இணை கமிஷனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை
தேர்தல் நெருங்குவதால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதன்படி சென்னை நகர போலீஸ் கமிஷனரும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள ராதாகிருஷ்ணனும் ஒருவர் பதவிக்கு மற்றொருவர் என்று இருவருமே மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திரிபாதிக்கு முக்கியத்துவம்
கமிஷனர் ஜார்ஜ் சட்டம் ஒழுங்கு பதவிக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சிறைதுறைக்கு மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த முக்கியத்துவமும் இல்லாத பதவியில் இருந்த திரிபாதிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications