சென்னை குண்டுவெடிப்பு குறித்த புதிய துப்பு கிடைத்துள்ளது: டிஜிபி தகவல்
சென்னை: சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய துப்பு கிடைத்துள்ளதாக டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், குண்டு வெடித்த பெட்டிகளில் பயணம் செய்த மற்ற பயணிகளின் உதவியோடு குண்டு வைத்த தீவிரவாதிகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் போலீஸ் கம்யூட்டர் வரைபடம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நின்றிருந்த கவுகாத்தி ரயிலில் எஸ் 4 மற்றும் எஸ் 5 பெட்டிகளில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் பரிதாபமாக பலியானார். மேலும், காயமடைந்த 14க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் குண்டு வெடித்த இரண்டு பெட்டிகளிலும் நான்கு பேர் கையில் பையோடு ஏறியது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே பெட்டியில் பயணம் செய்த மற்றப் பயணிகள் மேலும் பல தகவல்களை அளித்துள்ளனர்.
அதனடிப்படையில், போலீசார் கம்யூட்டர் உதவியோடு குற்றவாளிகளின் உருவ வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். அவற்றை தமிழகம் முழுவதும் அனுப்பி விசாரணை மேற்கொள்கின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. அனூப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

துப்பு துலங்கியுள்ளது...
இந்த குண்டு வெடிப்பு வழக்கு மிகவும் சிரமமானது அல்ல. சில வழிகளில் இதில் துப்பு துலங்கி விட்டது.

தமிழக போலீசார்...
எனவே தமிழக போலீசாரே தாமாகவே இந்த வழக்கு விசாரணையை தன்னிச்சையாக நடத்தி முடிக்க முடியும்.

தீவிரவாதிகளின் முகம்...
குண்டு வைத்த தீவிரவாதிகளை சில பயணிகள் நன்றாக பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் தீவிரவாதிகள் முகம் வரையப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்...
அந்த கம்ப்யூட்டர் படத்தை வைத்து தீவிரவாதிகளை தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அந்த கம்ப்யூட்டர் படத்தை தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளோம்.

அடுத்த கட்டம்...
இதன் முலம் எங்களது விசாரணை விரைவில் அடுத்தக் கட்டத்துக்கு நகரும் என்று எதிர் பார்க்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications