சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற டெல்லியிலிருந்து வந்த ராட்சத மோட்டார்
சென்னை: சென்னையில் மழை ஓய்ந்த பிறகும் பல்வேறு இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. தேங்கியுள்ள நீரை வெளியேற்ற டெல்லியிலிருந்து ராட்சத மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதியன்று பெய்த கனமழையால் சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. கொடுங்கையூர், பூந்தமல்லி, மாங்காடு, கோட்டூர்புரம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, திருவொற்ரியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது.

இதேபோல, தாம்பரம், முடிச்சூர், முகலிவாக்கம், வேளச்சேரி மற்றும் வட சென்னையில் சில இடங்களில் இன்னும் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. இந்த பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் வடிவதற்கு உரிய வடிகால் வசதி இல்லை. எனவே ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக டெல்லியிலிருந்து விமானங்கள் மூலம் ராட்சத மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications