இன்னொரு அனிதாவை இழக்கக் கூடாது.. என்ன செய்யலாம்.. உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
சென்னை: ஆயிரமாயிரம் எதிர்கால கனவுகளுடன் சிறகடித்து பறந்த ஒரு இளம் பட்டாம்பூச்சி சிறகொடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. வளர் இளம் வயது முதலே, மருத்துவ கனவுகளுக்காக விதை தூவப்பட்டு, அந்த 'கனவு செடி' காய்க்கும் பருவம் வந்தபோது, வேறோடு வெட்டி எறியப்பட்டுள்ளது.
"கனவு காணுங்கள் இளைஞர்களே.." என அறைகூவல் விடுத்த அப்துல்கலாம் பிறந்த மண்ணில், மருத்துவராக கனவு கண்டதற்காக, ஒரு இளம் பிஞ்சு காவு கொடுக்கப்பட்டுள்ளது.

அனிதா தற்கொலை... இன்று தமிழர்கள் நெஞ்சமெல்லாம் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. தாய் தமிழகத்தில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து உலகின் பல மூலைகளில் வாழும் தமிழர்களும், "என்ன தப்பு செய்தது அந்த குழந்தை" என குமுறிக்கொண்டுள்ளனர்.
ஏன் இந்த பெரும் துயரத்தை தமிழகம் சந்திக்க நேரிட்டது? எங்கே இடறினோம்? எப்படி மீளலாம்..?, இனியும் அனிதா போன்ற ஒரு பிஞ்சை இழக்கும் பெருந்துயரத்தை தடுக்க, உடனே செய்ய வேண்டியது என்ன? உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள். உங்கள் ஆக்கப்பூர்வ கருத்துக்கள், உரியவர்கள் கவனத்திற்கு சென்றடைய ஒரு சிறு பாலம் அமைத்துக் கொடுக்கிறோம். உங்கள் கருத்துக்களை, வீடியோ கருத்துக்களை [email protected] என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம்.












Click it and Unblock the Notifications