அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் பலரும் தவெக, அதிமுகுவிற்கு இடம் பெயருவது அதிகமாக உள்ளது. ஆனால் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. திமுகவை விட்டு பிறகட்சிகளில் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள், பெரிய நிர்வாகிகள் யாருமே செல்வது இல்லையே... ஏன்.. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தனர். ஆனால் ஒரு எம்எல்ஏ கூட இதுவரை திமுகவில் இருந்து விலகி திமுகவில் சேரவில்லையே ஏன்.. இதன் பின்னணி பற்றி பார்ப்போம்.

அரசியலில் ஈடுபடும் அத்தனை அரசியல்வாதிகளின் இலக்கும் அதிகாரத்தை அடைவது தான்.. அதிகாரம் தான் அரசியல் என்பது எதார்த்தம். ஆளும் கட்சியாக இருக்கும் போது கிடைக்கும் அதிகாரம், அந்தஸ்து, பணம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது கிடைப்பது இல்லை. இதனால் ஆளும் கட்சியில் இணைந்து லாபம் பெற வேண்டும் அல்லது அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியில் தான் பலரும் இணைவார்கள். அப்படி பலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர். ஆனால் திமுகவில் இருந்து எந்த பெரிய நிர்வாகியும் ஏன் இணையவில்லை. ஏன் அதிமுகவில் இருந்து இவ்வளவு நிர்வாகிகள் வெளியேறி திமுக மற்றும் தவெகவில் இணைந்தனர் என்ற இரண்டு கேள்விகள் பலருக்கும் இருக்கும். அதற்கான பதில்களை பார்ப்போம்.

Given that many members of the AIADMK are joining the TVK why haven t people left the DMK

தமிழக அரசியலில் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்கு பின்பும் சரி, 2 அதிமுகவில் இருந்து முக்கியத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கூடத் தமிழக வெற்றிக் கழகத்தில் அலை அலையாக இணைந்து வருகிறார்கள். அதேபோல் கணிசமானோர் திமுகவிலும் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் தவெகவில் இணையலாமா அல்லது திமுகவில் இணையலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திமுகவை விட்டுப் பெரிய தலைவர்களோ, முன்னாள் அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ வேறு எந்தக் கட்சிக்கும் மாறுவதே இல்லை. ஏன் இந்த நிலை? திமுகவை விட்டு ஏன் யாரும் போவதில்லை? என்ற கேள்விக்கு விடை தேடினால், அதன் பின்னணியில் உள்ள கட்சி அமைப்பு மற்றும் 'அரசியல் பாதுகாப்பு' என்ற வலுவான காரணம் நமக்குத் தெரியவரும்.

ஏன் திமுகவை விட்டு யாரும் போவதில்லை?

திமுக கழகத்தை விட்டுப் பெரிய நிர்வாகிகள் யாரும் வெளியேறாததற்கு மிக முக்கியமான காரணம் - "திமுகவின் அசைக்க முடியாத கட்சி கட்டமைப்பு, விசுவாசத்திற்கான அங்கீகாரம் மற்றும் ஒற்றைத் தலைமை தரும் அரசியல் பாதுகாப்பு. தலைமுறை தலைமுறையாக திமுக ஒரு குடும்பம் போல் கட்டமைப்பை கொண்டிருக்கிறது.

திமுக என்பது வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் இயங்கும் கட்சி அல்ல என்பது கருணாநிதி காலத்தில் இருந்து, தற்போது ஸ்டாலின் வரை தொடர்கிறது. அது தலைமுறைகளைக் கடந்து அடிமட்டம் வரை வேரூன்றிய ஒரு குடும்பக் கட்டமைப்பாக இருக்கிறது. திமுகவில் ஒரு நிர்வாகிக்குத் தற்போதைய தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அடுத்த முறை வாய்ப்பு வரும் அல்லது வாரியம், கழகப் பொறுப்பு என ஏதோ ஒரு வகையில் அவரது உழைப்புக்குக் கண்டிப்பான அங்கீகாரம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, மு.க.ஸ்டாலின் எப்படியும் அடுத்து ஜெயிக்க வைப்பார்.. அதிகாரம் கண்டிப்பாக திரும்ப கைக்கு வரும் என்பதை அவர்கள் ஆழமாக நம்புகிறார்கள்.

ஆனால் இதற்கு நேர்மாறாக, ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள், தொடர் தேர்தல் தோல்விகள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான அதிருப்தியால், அக்கட்சி நிர்வாகிகளிடம் ஒருவித 'அரசியல் எதிர்கால பயம்' ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் விமர்சிக்கிறார்கள். இந்த பயத்தின் உச்சகட்டமாகத்தான், சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுகவில் இருந்து தவெக-விற்கும் திமுகவிற்கும் மிகப்பெரிய அளவில் தலைவர்கள் தஞ்சம் புகத் தொடங்கியுள்ளனர்.

அதிமுகவின் கோட்டையாக இருந்த முக்கிய முகங்கள், தூண்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்களது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்ய திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவின் மூன்று முறை முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் இருந்த ஓ. பன்னீர்செல்வம், இபிஎஸ்-உடனான கடுமையான அதிகாரப் போட்டிக்குப் பின், கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனும் (பதவியை ராஜினாமா செய்துவிட்டு) திமுகவில் இணைந்தனர்.

அதற்கு முன்பாக செந்தில் பாலாஜியும் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர். கரூர் மாவட்ட அதிமுகவின் அசுர பலமாக இருந்து ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர், இன்று திமுகவின் தவிர்க்க முடியாத தூண் ஆக இருக்கிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன்: தூத்துக்குடி மற்றும் தென் மாவட்ட அதிமுகவின் முகமாக இருந்து ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், தற்போது திமுகவின் சீனியர் அமைச்சர்.

பி.கே. சேகர்பாபு: வடசென்னை அதிமுக கோட்டையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், திமுகவிற்கு வந்து இன்று சென்னையின் அசைக்க முடியாத அமைச்சராக வலம் வருகிறார்.

தங்க தமிழ்ச்செல்வன்: தேனி மாவட்ட அதிமுகவின் அசைக்க முடியாத தளபதியாக இருந்தவர், இன்று திமுகவின் முக்கிய எம்பியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். இந்த லிஸ்ட் சிறியது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறிய பலர் திமுகவின் முக்கிய தலைவர்களாக இன்று இருக்கிறார்கள். இந்த லிஸ்ட் மிகப்பெரியது ஆகும்.

அதேபோல் தவெக-வில் பலர் இணைந்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளும் கட்சியாக மாறி பின்னர், மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ-க்களும் முன்னாள் அமைச்சர்களும் தவெக-வை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே அதிமுகவின் முக்கிய சிட்டிங் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), பி. சத்யாபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர். இவர்களுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டதே கே.ஏ. செங்கோட்டையன் தான் (கோபிசெட்டிபாளையம்). தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பே தவெக-வில் இணைந்தார். இப்போது தவெகவில் முக்கிய அமைச்சராக இருக்கிறார். இதேபோல் சிடிஆர் நிர்மல்குமார் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். சட்டசபை தேர்தலில் வென்ற பின்னர், மின்சார துறை அமைச்சராக இருக்கிறார்.

அதேபோல் கடந்த ஜூன் 6, 2026 அன்று அதிமுகவின் 4 முக்கிய முன்னாள் அமைச்சர்களான எம்.சி. சம்பத் (கடலூர்), என்.ஆர். சிவபதி (திருச்சி), கடம்பூர் சி. ராஜூ (தூத்துக்குடி) மற்றும் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (திருப்பூர்) ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து, ஒரே நாளில் தவெக-வில் இணைந்து தமிழக அரசியலையே உலுக்கினர்.

அரசியலில் அதிகாரத்தை விட "நிலையான எதிர்காலமும், மரியாதையும்" தான் முக்கியம் என்று நினைத்தே பலர், அதிமுகவில் இருந்து விலகி, தவெக மற்றும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் மோசமாக ஒன்றும் தோற்கவில்லை. 47 இடங்களில் வென்று ஓரளவு வலிமையான எதிர்க்கட்சியாகவே உள்ளார். என்ன சிக்கல் என்றால், அதிமுக இதுவரை ஐந்து வருடங்களுக்கு மேல் எதிர்க்கட்சியாக இருந்தது இல்லை. தவெக உடன் கூட்டணி வைக்க அதிமுகவினர் கணிசமானோர் தேர்தலுக்கு முன்பே விரும்பி உள்ளனர். அது நடக்காமல் போனது. அதேபோல் அதிமுக தேர்தலில் தோற்றும்போனது. இதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் தவெகவில் அடுத்தடுத்து இணைந்து வருகிறார்கள். சிலர் திமுகவிலும் இணைந்துள்ளனர். ஆனால் திமுகவில் இருந்து பெரிய நிர்வாகிகள் யாரும் தவெகவில் போய் சேரவில்லை.இதற்கு ஸ்டாலினின் மீதான நம்பிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+