நவம்பர் 3-ல் புதிய முடிவு! - இளங்கோவனை வாழ்த்திய பின் ஜி கே வாசன் பேட்டி
சென்னை: காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸை கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ஜிகே வாசன், வரும் நவம்பர் 3-ம் தேதி புதிய முடிவை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் விலகியது, ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக நியமிக்கப்பட்டது என்று பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

ஜிகே வாசன் ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். அவரது தலைமையில் மீண்டும் தமாகா உதயமாகும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதும் முதல் ஆளாக சத்தியமூர்த்தி பவனுக்குப் போய் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ஜிகே வாசன்.
வாழ்த்திய கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த வாசன், கட்சி மேலிடம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
அவர் கூறுகையில், "சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் தலைமையின் செயல்பாடு தொண்டர்களின் மனநிலைக்கு மாறாகவே உள்ளது. கட்சியின் உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்களைச் சேர்க்க காங்கிரஸ் மேலிடம் யோசித்தது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக காங்கிரசை மேலிடம் கண்டு கொள்ளவில்லை.
தமிழகம் முழுவதும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் தொடங்குவது தொடர்பான சூழல் ஏற்பட்டால் தெரிவிப்பேன். நவம்பர் 3ம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்," என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications