4887 விருப்ப மனுக்கள்.. நேர்காணலைத் தொடங்கினார் ஜி.கே.வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு கொடுத்துள்ளவர்களிடம் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேர்காணலைத் தொடங்கினார்.

சட்டசபைத் தேர்தலில் தமாகாவும் போட்டியிடவுள்ளது. புதிதாகப் பிறந்த கட்சி என்றாலும் கூட இக்கட்சியிலும் தேர்தலில் போட்டியிட தொண்டர்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.

GK Vasan conducts candidate interview

எந்தக் கூட்டணியில் தமாகா சேரப் போகிறது என்பது தெரியவில்லை என்ற போதிலும் மொத்தம் 4887 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

இதையடுத்து இன்று சென்னை தி.நகரில் உள்ள கல்யாண் மண்டபத்தில் இன்று நேர்காணலைத் தொடங்கினார் ஜி.கே.வாசன். 27ம் தேதி வரை இது நடைபெறவுள்ளது.

முதல் நாளான இன்று காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளிடம் ஜி.கே.வாசன் நேர்காணல் நடத்தினார். பிற்பகல் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது தொகுதி நிலவரம், தமாகாவின் நிலை, மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு, சீட் கொடுத்தால் ஜெயிக்க முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர் கேட்டறிந்தார்.

நேர்காணலின்போது மூத்த தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+