For Daily Alerts
Just In
தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்வு! வெள்ளியும் உயர்ந்தது
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 592 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்து ரூ. 22,824 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 2,853 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 55 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 51,390 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து தங்க ஆபரணங்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
English summary
Gold prices are likely to shoot up by about Rs. 592 per sovereign following the government's decision to hike customs duty, jewellers and bullion traders told.
Story first published: Thursday, September 19, 2013, 13:07 [IST]