பொள்ளாச்சி மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றவாளி மீது குண்டர் சட்டம்
கோவை: பொள்ளாச்சியில் காப்பகத்தில் தங்கியிருந்த இரண்டு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வீராசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த காப்பகத்தில் தங்கியிருந்த 2 சிறுமிகள் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இரவு பலாத்காரம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தி வீராசாமி (வயது 23) என்பவனை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வீராசாமி மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனர்.
அதனையேற்று, வீராசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications