ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களின் பக்கம்தான் அரசு நிற்கும்: கலெக்டர் உறுதி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு.. போராட்ட களத்தில் கல்லூரி மாணவர்கள்- வீடியோ
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் செயல்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இன்று மக்கள் திரளாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நிருபர்களிடம் கலெக்டர் வெங்கடேஷ் இதுபற்றி கூறுகையில், ஸ்டெர்லைட் பற்றி, மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு நிர்வாகம் மக்களுக்கு ஆதரவாகவே செயல்படும். இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications