பலாத்கார மிருகங்களை விட ஈவு இரக்கமே இல்லாத கொடூரர்கள் இவர்கள்தான்...!
மாற்றுத் திறனாளி பயணியை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
Recommended Video

மதுரை: எதுக்குமே ஒரு ஈவு இரக்கம் வேணாமா? செய்ற தப்பை தட்டி கேட்டா அதுக்கு இன்னொரு மன்னிக்க முடியாத தப்பை செய்யறதா?
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு மாநகர பேருந்து சோழவந்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது. சமயநல்லூர் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் சிலர் அந்த பஸ்ஸில் ஏற தயாராக நின்றிருந்தனர். ஆனால் பஸ் அந்த ஸ்டாப்பில் நிற்காமல், கொஞ்ச தூரம் தள்ளி போய் நின்றது. இதனால் பயணிகள் ஓடிப்போய் அதில் ஏறினர்.

ஸ்டாப்பில் ஏன் நிறுத்தல?
ஒவ்வொருவராக ஏறியபின் கடைசியாக ஒரு பயணி ஏற முயன்றார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி. பெயர் முருகன். அதனால் அவரை கண்டக்டர் வேகமாக ஏறும்படி அவசரப்படுத்தினார். அதற்கு முருகன் டிரைவரிடம், "ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள்? பஸ் ஸ்டாப்பில் நிறுத்த வேண்டியதுதானே?" என்று கேட்டார்.

தகாத வார்த்தைகள்
இப்படி கேட்டதும் கண்டக்டருக்கும், டிரைவருக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தங்களை எப்படி கேள்வி கேட்கலாம் என்று ஆத்திரம் மண்டைக்கேறி தகாத வார்த்தைகளால் முருகனை திட்ட தொடங்கினர். அப்போதும் ஆவேசம் அடங்காத இருவரும், "நீ கீழே இறங்கு... நீ இறங்கினால்தான் பஸ் எடுப்போம்" என்று தகராறு செய்தனர்.

அராஜகத்தின் உச்சம்
ஆனால் முருகனோ, "நான் ஏன் இறங்க வேண்டும்? நான் என்ன தப்பு செய்தேன்?" என்றார். எவ்வளவு சொல்லியும் கீழே இறங்காததால், டிரைவரும், கண்டக்டரும் முருகனை சரமாரியாக அடித்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் முருகனை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் பஸ்ஸிருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனை கண்ட பொதுமக்களும், மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கண்டக்டர், டிரைவர் நடத்திய இந்த அராஜகத்தை செல்போனில் படமெடுத்தனர். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

தொலைந்துபோன மனிதாபிமானம்
பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு துறை ஊழியர்களுக்கு பாடமா எடுக்க முடியும்? அரசு ஊழியர்கள் என்ற எண்ணம் இல்லாட்டியும் ஒரு சராசரி மனிதன் அல்லது மாற்றுத் திறனாளியை அடிக்கிறோம், கீழே தள்ளிவிடுகிறோம் என்ற அடிப்படை உணர்வு கூடவா கண்டக்டருக்கும், டிரைவருக்கும் இல்லாமல் போய்விட்டது. வர வர மனிதாபிமானத்தை காற்றில் தொலைத்து கொண்டிருக்கும் இது மாதிரி சில நபர்களை பார்த்தாலே, நாம் தமிழர்கள்ன்னு சொல்லிக் கொள்ளவே வெட்கமா இருக்கு!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications