For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓவியப் போட்டி... அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்... தனியார் மாணவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம்

Google Oneindia Tamil News

தேவகோட்டை: எல்.ஐ.சி சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் தனியார் பள்ளி மாணவர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளனர் தேவகோட்டை அரசு பள்ளி மாணவர்கள்.

எல்.ஐ.சி. சார்பாக ஓவியப் போட்டி அண்மையில் தேவகோட்டையில் நடைபெற்றது. இதில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் பாலமுருகன் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்தார்.

Government School student got 1st prize in Drawing

எல்.ஐ.சி. சார்பாக ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த பாலமுருகன் மற்றும் 4ம் வகுப்பு மாணவர் கிஷோர்குமார் ஆகியோருக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கபட்டன.

நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிறைவாக மாணவி அல்நிச்மா நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, விழாவிற்கு வந்தவர்களை பள்ளி மாணவர் ராஜேஷ் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

English summary
Government School students got 1st prize in drawing competition in Devakottai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X