தமிழகத்தில் ஆட்சி மாறும்.. திமுக ஆட்சி அமையும்.. ஸ்டாலின் நெல்லையில் பேச்சு
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
நெல்லை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். விரைவில் திமுக மீண்டும் ஆட்சிக்கும் வரும் என்றும் கூறியிருக்கிறார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நெல்லையில் தீவிர சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். பல்வேறு இடங்களில் அதிமுக குறித்தும், தற்போதைய ஆட்சியின் நிலை குறித்தும் பேசி வருகிறார்.

அவர் தனது பேச்சில் அதிமுக அரசிடம் பல கேள்விகளை கேட்டு இருக்கிறார். சட்டமன்றத்தைக் கூட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளாரா என்று கேட்டு இருக்கிறார்.
ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு என்றார்கள், ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் மதுக்கடை எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் திமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications