நம்பிக்கை வாக்கெடுப்பு அமளி.. சட்டசபை செயலாளரிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர் !
சட்டப்பேரவையில் நேற்று நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளரிடம் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கோரியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதேநேரத்தில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடத்தவில்லை என்ற புகாரும் ஆளுநர் முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநருக்கு திமுக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் காவல் துறையினர் சட்டமன்ற அவை காவலர்கள் உடையில் உள்ளே புகுந்து தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றி இருப்பதன் மூலம் இது முன் கூட்டியே திட்ட மிட்ட செயல் என்பது உறுதியாகியுள்ளது என அந்த கடிதத்தில் ஸ்டாலின் விளக்கியுள்ளார். இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரை சந்தித்து விளக்கிக் கூறினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடம் நடைபெற்றது. அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார் ஓபிஎஸ்.
இந்நிலையில், மும்பை சென்றுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளார். இந்த அறிக்கை கிடைத்த பின்னர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை என ஆளுநர் கருதினால் நடவடிக்கை எடுக்கக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications