நம்பிக்கை வாக்கெடுப்பு அமளி.. சட்டசபை செயலாளரிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர் !
சட்டப்பேரவையில் நேற்று நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளரிடம் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கோரியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதேநேரத்தில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடத்தவில்லை என்ற புகாரும் ஆளுநர் முன் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநருக்கு திமுக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் காவல் துறையினர் சட்டமன்ற அவை காவலர்கள் உடையில் உள்ளே புகுந்து தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றி இருப்பதன் மூலம் இது முன் கூட்டியே திட்ட மிட்ட செயல் என்பது உறுதியாகியுள்ளது என அந்த கடிதத்தில் ஸ்டாலின் விளக்கியுள்ளார். இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரை சந்தித்து விளக்கிக் கூறினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடம் நடைபெற்றது. அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார் ஓபிஎஸ்.
இந்நிலையில், மும்பை சென்றுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளார். இந்த அறிக்கை கிடைத்த பின்னர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை என ஆளுநர் கருதினால் நடவடிக்கை எடுக்கக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications