நிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கவர்னர் மேலும் 2 வார கால அவகாசம்!
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யமேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியர் நிர்மலா தேவி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள கல்லூரி மாணவிகளுக்கு வலை விரித்தார்.

இதை செல்போனில் அவர் பேசிய ஆதாரத்துடன் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவி கூறியதன் பேரில் முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மே 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்தார்.
இந்நிலையில் சிபிசிஐடி கஸ்டடியில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலும் அவர்கள் கூறும் தகவலின் படி வேறு யாரிடமாவது விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்பதாலும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு சந்தானம் ஆளுநரிடம் கேட்டார்.
அதனடிப்படையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்களுக்கு கால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications