மிக மோசமாகிவிட்டது தமிழகம்.. ஆளுநர் விரைவில் முடிவெடுக்க ஸ்டாலின் கோரிக்கை
தமிழகம் கடந்த ஒரு வாரமாக மிக மோசமான நிலையில் இருப்பதால் ஆளுநர் விரைவில் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் நிலையற்ற ஆட்சி குறித்து கவலை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் விரைவில் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி சசிகலா அணி என பிரிந்து சண்டை நடைபெற்று வருவதால், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஒரு நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. மேலும், அடுத்து எந்த ஆணி ஆட்சி அமைக்கும் என்ற போட்டியும் நிலவி வருவதால், இதுபற்றி தமிழகத்தின் ஆளுநர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பு சட்டத்தின் படி, நிலையான ஆட்சி அமைய தனது அதிகாரத்திற்குட்பட்டு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக பெரும் துன்பத்தை அடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications