பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வந்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பரபரப்பு ஏற்படுத்திய ஆளுநர், அங்கிருந்து செப். 19ம் தேதி சென்னை வந்தார்.

இதன்பிறகு ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால், இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் அடுத்த மாதத்திற்கு வழக்கை தள்ளி வைத்து அதுவரைநம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், செப்டம்பர் 21ம் தேதி நாக்பூர் விரைந்த ஆளுநர், மீண்டும் இன்று மும்பை வழியாக சென்னை வந்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. கட்டை விரல் காண்பித்ததாக ஆளுநர் கூறியிருந்தார். ஆனால் ஆளுநர் கூறியது பொய் என ஜெ. அண்ணன் மகன் தீபக் தெரிவித்திருந்தார். இதுபோன்ற பரபரப்பு சூழ்நிலைக்கு நடுவே ஆளுநர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications