ஜனாதிபதியிடம் ஆளுநர் அறிக்கை ஒப்படைப்பு! டிஸ்மிஸ் ஆகிறதா எடப்பாடி பழனிச்சாமி அரசு?
சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய அறிக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய அறிக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபையில் கடந்த 18-ந் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

மார்ஷல் சீருடையில் போலீஸ்
போலீஸ் அதிகாரிகளை சட்டசபை மார்ஷல் சீருடையில் வரவழைத்து சபாநாயகர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றினார். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

கிழிக்கப்பட்ட சட்டை
இச்சம்பவம் தொடர்பாக கிழிக்கப்பட்ட சட்டையுடனே ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார். திமுக எம்.பிக்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியினரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசுக்கு அறிக்கை
இதையடுத்து சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசகர் அறிக்கை கேட்டிருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
இந்த அறிக்கை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசுக்கு எதிராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வார்? ஆட்சியை டிஸ்மிஸ் செய்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications