ஜனாதிபதியிடம் ஆளுநர் அறிக்கை ஒப்படைப்பு! டிஸ்மிஸ் ஆகிறதா எடப்பாடி பழனிச்சாமி அரசு?
சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய அறிக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய அறிக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபையில் கடந்த 18-ந் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

மார்ஷல் சீருடையில் போலீஸ்
போலீஸ் அதிகாரிகளை சட்டசபை மார்ஷல் சீருடையில் வரவழைத்து சபாநாயகர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றினார். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

கிழிக்கப்பட்ட சட்டை
இச்சம்பவம் தொடர்பாக கிழிக்கப்பட்ட சட்டையுடனே ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார். திமுக எம்.பிக்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியினரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசுக்கு அறிக்கை
இதையடுத்து சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசகர் அறிக்கை கேட்டிருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
இந்த அறிக்கை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசுக்கு எதிராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வார்? ஆட்சியை டிஸ்மிஸ் செய்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications