For Daily Alerts
Just In
தோழி இறந்த துக்கம் தாங்காமல் கோவையில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை
கோவை: கோவையில் உயிராக பழகிய தோழி இறந்து போனதால் மனமுடைந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை கணபதி முதலாவது விரிவாக்க வீதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் ஆர்த்தி (24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருடன் வேலை பார்த்த பெண் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிராக பழகிய தோழி இறந்து போனதால் ஆர்த்தி மனமுடைந்தார். சோகத்தில் இருந்த அவர் வீட்டுக்கு வந்து விட்டார்.
நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Graduate girl in mourning death of his close girl friend
Story first published: Saturday, April 1, 2017, 3:12 [IST]