முன்னாள் முதல்வர் காமராஜரின் தம்பி பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார்
சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜரின் தம்பி பேத்தி மயூரி கண்ணன் தனது குடும்பத்துடன் திமுகவில் இணைந்தார். சென்னை அறிவாலயத்தில் இன்று திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னணியில் திமுகவில் இணைந்தனர்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
திமு கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (2.4.2016) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயர்த்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் பெருந்தலைவர் அவர்களின் இளைய சகோதரரின் மகள் சந்திரா, கண்ணன், ராஜாமணி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் தம்பி பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார் pic.twitter.com/Yu1wFy8ITn
— Oneindia Tamil (@thatsTamil) April 2, 2016
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், தலைமை நிலையச் செயலாளர்கள் கு.க.செல்வம், துறைமுகம் காஜா, ஆ.த.சதாசிவம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
காமராஜரின் அப்பாவும், மயூரியின் தாத்தாவும் அண்ணன், தம்பிகள். அண்ணாமலை நாடார், என்பவரின் மகள் சந்திராவின், மகள்தான் இந்த மயூரி. சென்னை, தண்டையார்பேட்டையில் குடியிருந்து வருகின்றனர். கணவர் கண்ணன், தொழிலதிபர்; பருப்பு மில் வைத்து இருக்கிறார். எம்.ஏ.அரசியல் நிர்வாகம் பயின்ற மயூரி, 2014ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். என்னை காமராஜரின் பேத்தி என்ற அடையாளம் பாஜகவில் கிடைக்கவில்லை என்று கூறி கடந்த ஆண்டே திமுகவில் இணையப் போவதாக கூறினார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கு, தென் மாவட்டங்கள் முழுவதும், தி.மு.க. வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று மயூரி கண்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications