For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் முறைகேடு – மதுரை பிரபல தொழிலதிபர் சோலைராஜன் மீது வழக்கு!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த சாட்டையை சகாயம் சுழற்றத்துவங்கி இருக்கும் நிலையில் கிரானைட் முறைகேடு குறித்து மீண்டும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

மதுரை, மேலூரில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக 4 பேர் மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Granite scam petition on four members in Madurai…

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜா என்பவர் அளித்துள்ள புகாரின் பேரில் ஓய்வு பெற்ற தாசில்தார் வெங்கடசுப்பு, மகன்கள் முரளி, மோகன் ஆகியோர் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், ராஜாவின் புகாரின் அடிப்படையில் மதுரையின் பிரபல தொழிலதிபரான சோலைராஜன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, வழக்கின் மனுதாரரான ராஜா, கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுவதால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக இவர்கள் நான்கு பேர் மீதும் புகார் அளித்திருந்தார்.

English summary
Another granite scam complaint filed on 4 members in Madurai, Mealur. Police filed case on three people and one business man.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X