கிரானைட் முறைகேடு முழு விசாரணை அறிக்கை - நாளை கோர்ட்டில் தாக்கல்!
மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையானது செப்டம்பர் 15 ஆம் (நாளை) தேதியன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக விசாரணை அதிகாரி சகாயம் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்ட ஆணையர் மற்றும் தனி அலுவலர் சகாயம் தெரிவித்தார்.

கிரானைட் குவாரிக்காக நரபலி கொடுக்கப்பட்டு இ.மலம்பட்டி கிராமத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மயானத்தில் சனிக்கிழமை இரவு முழுக்க அவர் தங்கியிருந்தார். பின்னர் காலையில், சட்ட ஆணையத்தின் குழுவினரை வரவழைத்த அவர் காலை 8 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அதன்பின்னர், "கிரானைட் முறைகேடு விசாரணை அறிக்கை செப்டம்பர் 15 இல் உயர்நீதிமன்றத்தல் தாக்கல் செய்ய வேண்டும். அப்பணிகளைக் கவனிப்பதற்காகச் செல்கிறேன். நரபலி குறித்த விசாரணையை காவல் மற்றும் வருவாய்த் துறையினர் சரியாகச் செய்வர் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications