Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய கண்ணாடி கதவு, கிரானைட் சுவருக்கு பேரீச்சம்பழம் – விமான நிலையத்தில் 33வது விபத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக கண்ணாடிகள் மட்டுமே உடைந்து சிதறி வரும் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் முதல் முறையாக கிரானைட்டுகளால் ஆன பக்கவாட்டுச் சுவர் நேற்று உடைந்து விழுந்தது.

இந்த விபத்தையும் சேர்த்தால் இதுவரையில் 33 தடவை விமான நிலைய கண்ணாடி கதவுகளும், சுவர்களும் இடிந்து விழுந்துள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

Granite wall tiles fall at Chennai airport…

உடைஞ்சு உடைஞ்சு விழுது:

கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 11 முறை மேற்கூரைகளும், 9 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் என 32 முறை உடைந்து விழுந்து உள்ளன. இந்த சம்பவங்களில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

உள்நாட்டு முனையம்:

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் உள்ள மேலாளர் அறை அருகே வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளுக்காக லிப்ட் வசதி உள்ளது.

உடைந்து விழுந்த கிரானைட்:

இதில் புறப்பாடு பகுதியில் உள்ள லிப்ட்டின் சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட 2 கிரானைட் கற்கள் நேற்று காலை 9.30 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்தன.

ஓட்டம் பிடித்த பயணிகள்:

அந்த நேரத்தில் நுழைவு எண் 1 ஆவது வாசல் வழியாக கொச்சி, பெங்களூரு செல்ல இருந்த பயணிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

ஜஸ்ட் 33 ஆவது தடவைதான்:

அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது 33 ஆவது முறையாக நடந்த சம்பவமாகும்.

விரைந்து அகற்றிய ஊழியர்கள்:

தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் உடைந்து விழுந்த கற்களை அகற்றினார்கள். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை உடைந்து விழும் சம்பவங்களால் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.

பயப்படாதீங்க பயணிகளே:

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "சாதாரண சம்பவம் தான் யாரும் பயப்பட வேண்டாம். கிரானைட் கற்கள் ஒட்டிய சிமெண்டு சரியாக ஒட்டப்படாததால் விபத்து நடந்து உள்ளது. இது பற்றி முறைப்படி விசாரணை நடத்தி வருகிறோம்" என்று "33 ஆவது முறையாக" தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+