பழைய கண்ணாடி கதவு, கிரானைட் சுவருக்கு பேரீச்சம்பழம் – விமான நிலையத்தில் 33வது விபத்து!
சென்னை: வழக்கமாக கண்ணாடிகள் மட்டுமே உடைந்து சிதறி வரும் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் முதல் முறையாக கிரானைட்டுகளால் ஆன பக்கவாட்டுச் சுவர் நேற்று உடைந்து விழுந்தது.
இந்த விபத்தையும் சேர்த்தால் இதுவரையில் 33 தடவை விமான நிலைய கண்ணாடி கதவுகளும், சுவர்களும் இடிந்து விழுந்துள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

உடைஞ்சு உடைஞ்சு விழுது:
கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 11 முறை மேற்கூரைகளும், 9 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் என 32 முறை உடைந்து விழுந்து உள்ளன. இந்த சம்பவங்களில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
உள்நாட்டு முனையம்:
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் உள்ள மேலாளர் அறை அருகே வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளுக்காக லிப்ட் வசதி உள்ளது.
உடைந்து விழுந்த கிரானைட்:
இதில் புறப்பாடு பகுதியில் உள்ள லிப்ட்டின் சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட 2 கிரானைட் கற்கள் நேற்று காலை 9.30 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்தன.
ஓட்டம் பிடித்த பயணிகள்:
அந்த நேரத்தில் நுழைவு எண் 1 ஆவது வாசல் வழியாக கொச்சி, பெங்களூரு செல்ல இருந்த பயணிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
ஜஸ்ட் 33 ஆவது தடவைதான்:
அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது 33 ஆவது முறையாக நடந்த சம்பவமாகும்.
விரைந்து அகற்றிய ஊழியர்கள்:
தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் உடைந்து விழுந்த கற்களை அகற்றினார்கள். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை உடைந்து விழும் சம்பவங்களால் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.
பயப்படாதீங்க பயணிகளே:
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "சாதாரண சம்பவம் தான் யாரும் பயப்பட வேண்டாம். கிரானைட் கற்கள் ஒட்டிய சிமெண்டு சரியாக ஒட்டப்படாததால் விபத்து நடந்து உள்ளது. இது பற்றி முறைப்படி விசாரணை நடத்தி வருகிறோம்" என்று "33 ஆவது முறையாக" தெரிவித்தனர்.
-
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications