ஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்!
Recommended Video

சென்னை: சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக இந்தப் படம்தான் உலா வந்து கொண்டுள்ளது.. அத்தனை பேரின் கண்களையும் குளமாக்கியபடி.
சமூகத்தின் ஒட்டுமொத்த அவலத்தையும் இந்த ஒரே படம் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இதுதான் மக்கள் மனதை படு வேகமாக ஈர்த்து விட்டது இந்த புகைப்படம்.

யார் எடுத்த படம், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இதைப் பார்க்கும் யாருக்குமே எந்த விளக்கமும் தேவைப்படாது. நாட்டு நடப்பை அப்படியே புட்டு வைக்கிறது இந்த படம்.
அந்தப் பாட்டியின் கண்களைப் பாருங்கள், அவரது கைகளைப் பாருங்கள்.. எத்தனை செய்தி.. எத்தனை வேதனை.. எத்தனை ஆதங்கம்.. எத்தனை குமுறல்.. எத்தனை வருத்தம்.. எத்தனை எதிர்பார்ப்பு.. எத்தனை ஏமாற்றம்.
மறுபக்கம் அந்தக் குரங்கு.. அதன் உணர்வுகளைப் பாருங்கள். அதன் கண்களைப் பாருங்கள். அது கைவைத்திருக்கும் விதத்தைப் பாருங்கள்.. உணர்ந்து அது செய்திருக்கவில்லைதான். ஆனால் அதன் தோற்றமும், அதன் இருப்பும் அந்தப் பாட்டிக்கு மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே சமாதானம் செய்வதைப் போல, ஆறுதல் சொல்வதைப் போல உள்ளது.
இந்தப் படம் பார்க்கும் யாருக்குமே மனதில் லேசான வலி பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications