திறந்த வெளியில் அசுத்தம் – தடுப்பு நடவடிக்கை குறித்து பதிலளிக்க தெற்கு ரயில்வேக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொதுமேலாளரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த உத்தரவின் பேரில் விளக்கம் அளிக்காவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Green tribunal asks about the actions for defection in open…

சென்னை வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் ரயில் தண்டவாளத்தின் ஓரத்திலேயே மக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதனை தடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியில் பொதுகழிப்படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், சுரேந்தரநாத் கார்த்திக் என்பவர் பசுமை தீர்ப்பாயம் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், பொதுகழிப்பிடங்களை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

உத்தரபடி இருவரும் ஆஜராகமல் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+