நியூட்ரினோவுக்கு சூழல் அனுமதி: மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
சென்னை: நியூட்ரினோ ஆய்வகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக சென்னையிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் உள்ள போடி மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்வதற்காக 2 கிலோ மீட்டர் நீள சுரங்கம் தோண்டப்பட்டு பூமிக்கு அடியில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆய்வகம் அமைப்பதற்காக சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி 01.06.2011-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவில் குறிப்பிட்டதைப் போன்று இது தொடர்பாக உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.
கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் ஆய்வு மையம் சார்பில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படும்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும், அது செயல்படத் தொடங்கியதும் பாதிப்பு இருக்காது என அந்த மையத்தின் விஞ்ஞானிகளே தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வகத்துக்காக 6 லட்சம் டன் எடையுள்ள பாறைகள் வெட்டி எடுக்கப்பட உள்ளன. இவ்வளவு பெரிய அளவில் பாறைகளை வெட்டி எடுப்பதன் மூலம் ஆறுகள், நீர்வளம், அணைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படவில்லை. எனவே, இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வு முழுமையானதாக இல்லை.
இந்த ஆய்வகத்துக்காக அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் பூமிக்கு அடியில் நீரோட்டம் பாதிக்கப்பட்டு நீர்வளம் பாதிக்கப்படலாம். இந்த ஆய்வகத்தின் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை என 12 அணைகள் உள்ளன. இந்த ஆய்வகத்தால் அணைகளுக்கு நீர்வரத்து பாதிக்குமா, அணைகள் பாதிக்கப்படுமா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த அனுமதியை வழங்கும்போது முழு மனதையும் செலுத்தவில்லை. எனவே, இந்த அனுமதியை சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி எஸ்.சொக்கலிங்கம், தொழில்நுட்ப உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications