துப்பாக்கிக்கு ஆயுத பூஜை செய்த அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு !
கோவை: ஆயுத பூஜை விழாவில் துப்பாக்கி, வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வழிபாடு நடத்தியதாக புகார் எழுந்ததையெடுத்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆயுத பூஜையின் போது தொழில் செய்யும் இயந்திரங்கள், புத்தகங்கள் இவற்றை எல்லாம் வைத்து பூஜை செய்வது வழக்கம். ஆனால், ஆயுத பூஜையில் துப்பாக்கி, கத்தி, அரிவாள், வாள் என மனிதர்களைக் கொல்லும் ஆயுதங்களை வைத்து கொண்டாடிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது முகநூல் பக்கத்தில், ஆயுத பூஜை வழிபாடு இனிதே நிறைவுற்றதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள், வாள் ஆகியவை பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்தது.
ஆயுத பூஜை என்பது தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படக்கூடிய கருவிகளை சுத்தம் செய்து வழிபாடு நடத்தும் ஒரு பண்டிகையாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் துப்பாக்கியை வைத்து அர்ஜூன் சம்பத் வழிபாடு நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துப்பாக்கியை வைத்துதான் அர்ஜுன் சம்பத் தொழில் செய்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமாக ஆயுத பூஜையின் போது துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை வைத்து பூஜை நடத்திய அர்ஜுன் சம்பத் மீது இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தடா ரஹீம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முகநூல் பக்கத்தில் இருந்து அந்த படத்தை அர்ஜூன் சம்பத் நீக்கிவிட்டார்.
இந்நிலையில் கோவை காவல் ஆணையரிடம் மாவட்ட அனைத்து ஜமாத் அமைப்பினர் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் அர்ஜூன் சம்பத் மீது, மத வேற்றுமை உணர்வை தூண்டும் விதத்தில் செயல்படுதல், ஆயுத சட்டம் ஆகிய பிரிவுகளில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications