குட்கா விற்பனையை தடுக்கத் தவறிய இன்ஸ்பெக்டர் சம்பத்.. வீட்டுக்கு சிபிஐ சீல்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டுக்கு சிபிஐ சீல்!-வீடியோ
சென்னை: குட்கா விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக ஆய்வாளர் சம்பத் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குட்கா ஊழல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. குட்கா வியாபாரி மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின்படி நேற்றைய தினம் 5 மாநிலங்களில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

அதில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா உள்ளிட்டோர் வியாபாரியிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தடைவிதிக்கப்பட்ட குட்கா விற்பனையை கண்டுக்கொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது.
இந்த லஞ்ச பட்டியலில் தூத்துக்குடியில் பணியாற்றி வரும் ஆய்வாளர் சம்பத் என்பவரின் பெயரும் உள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் நேற்று சிபிஐ சோதனை நடத்திய நிலையில் இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications