For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநரோட சண்ட போடுறத நிறுத்திட்டு நிர்வாகத்த பாருங்க.. நாராயணசாமி மீது பாயும் எச்.ராஜா!

ஆளுநருடனான மோதலை நிறுத்திவிட்டு ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு எச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஆளுநருடனான மோதலை நிறுத்திவிட்டு ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு எச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார். யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநருக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

H.Raja advising Puducherry CM Narayanasamy that dont fight with the governor

அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் அரசியல் உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி பாஜக கவலைப்பட தேவையில்லை.

அதிமுகவின் பிரச்சனை என்பது அவர்களது உள்கட்சி விவகாரம், டிடிவி தினகரன் கைதுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

காவிரி பாசன விவசாயிகளுக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டு இன்று அவர்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று நாடகமாடி வருகிறது என்று கூறினார்.

மேலும் யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. எனவே முதல்வர் நாராயணசாமி ஆளுநருடனான மோதல் போக்கை கைவிட்ட நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றுமட எச்.ராஜா தெரிவித்தார்.

English summary
H.Raja advising Puducherry CM Narayanasamy that dont fight with the governor, concentrate on the work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X