எச்சு ராஜா ஒரு பைத்தியக்காரர்.. அறிவுடையவர்கள் அப்படி பேசமாட்டார்கள்.. கடுமையாக விளாசிய குஷ்பு!
சென்னை: பாஜக தேசிய செயலாளரான எச் ராஜாவை நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சரமாரியாக விளாசியிருக்கிறார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதலில் வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது.
இந்த போராட்டங்களில் மாணவர்களும் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிக்கட்சிகளும் அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரசார விவாதம்
திரை பிரபலங்கள் பலரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் காரசார விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பொய் பிரச்சாரம்
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்ற வாதங்கள் அனைத்தும் அரசியல் காரணத்திற்காக பரப்பப்படும் பொய் பிரச்சாரம் என்று கூறியிருந்தார்.

கடும் விமர்சனம்
தனது டிவிட்டர் பக்கத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் எச் ராஜா. இந்நிலையில் எச் ராஜாவின் கருத்து குறித்து நடிகை குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
|
நல்ல அறிவுள்ளவர்கள்
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எச்சு ராஜாவுக்கு தீவிர பித்துபிடித்துவிட்டது. நல்ல அறிவுள்ள யாரும் அவர் பேசுவது போன்று பேசமாட்டார்கள். ப்ளீஸ் பாஜகவில் இருந்து யாராவது அவருக்கு புகலிடம் கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார்.
|
உங்களுக்குதான் மனவியாதி
குஷ்புவின் இந்த கருத்துக்கு பாஜகவை சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பலரும் உங்களுக்குதான் மனவியாதி உள்ளது என்று சாடியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications