காவிரி: 44 வருஷம் ஆச்சு, 40 நாளில் ஒன்னும் குடிமுழுகாது: மீண்டும் எச் ராஜா தெனாவட்டு பேச்சு
44 வருடங்கள் ஆகியிருக்கு 40 நாளில் ஒன்னும் குடிமுழுகாது என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்தார்.
Recommended Video

மதுரை: காவிரிக்காக 44 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் ஒரு 40 நாள் காத்திருப்பதில் ஒன்றும் குடி முழுகாது என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்தார்.
காவிரி பிரச்சினை என்பது கர்நாடகா, தமிழகம், புதுவை, கேரளம் ஆகியவற்றுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. காவிரி நீரை ஒழுங்குப்படுத்த திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்கு செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மேலும் அந்த உத்தரவை அமல்படுத்த தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து 3 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சிகள் என மறியல், தர்னா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

எச் ராஜா பேட்டி
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா கூறுகையில் தர்னா, மறியல், போராட்டம், மோடி ஹெலிகாப்டரில் வந்தா கீழே ஹெலிகாப்டர் மாதிரி பேசுறது, ஹெலிகாப்டர் பார்த்து கும்பிடறதுக்கு ஒரு கட்சி இருக்கு, ஹெலிகாப்டருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு ஒரு கட்சி இருக்கு, ஆக இதெல்லாம் இவர்களை தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான செயல்களாகும்.

40 நாளில் ஒன்றும் குடி முழுகாது
இவ்வளவு பாவங்கள் செய்துள்ளது மாநில கட்சிகள். திராவிட கட்சிகளின் தகிடுதத்த அரசியலை தமிழக மக்கள் கேட்க வேண்டாம். காவிரி விவகாரத்தில் 44 வருடங்கள் ஆகியிருக்கும் 40 நாட்களில் ஒன்னும் குடி முழுகாது.

முழு நியாயம்
40 நாட்கள் அவகாசம் கேட்டதற்கு கலவர பூமியாக்குவதா?. 40 நாட்கள் காத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது. நிச்சயமாக தமிழகத்துக்கு முழு நியாயம் வழங்கப்படும் என்றார் எச்.ராஜா.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications