காவிரி: 44 வருஷம் ஆச்சு, 40 நாளில் ஒன்னும் குடிமுழுகாது: மீண்டும் எச் ராஜா தெனாவட்டு பேச்சு
44 வருடங்கள் ஆகியிருக்கு 40 நாளில் ஒன்னும் குடிமுழுகாது என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்தார்.
Recommended Video

மதுரை: காவிரிக்காக 44 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் ஒரு 40 நாள் காத்திருப்பதில் ஒன்றும் குடி முழுகாது என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்தார்.
காவிரி பிரச்சினை என்பது கர்நாடகா, தமிழகம், புதுவை, கேரளம் ஆகியவற்றுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. காவிரி நீரை ஒழுங்குப்படுத்த திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்கு செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மேலும் அந்த உத்தரவை அமல்படுத்த தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து 3 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சிகள் என மறியல், தர்னா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

எச் ராஜா பேட்டி
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா கூறுகையில் தர்னா, மறியல், போராட்டம், மோடி ஹெலிகாப்டரில் வந்தா கீழே ஹெலிகாப்டர் மாதிரி பேசுறது, ஹெலிகாப்டர் பார்த்து கும்பிடறதுக்கு ஒரு கட்சி இருக்கு, ஹெலிகாப்டருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு ஒரு கட்சி இருக்கு, ஆக இதெல்லாம் இவர்களை தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான செயல்களாகும்.

40 நாளில் ஒன்றும் குடி முழுகாது
இவ்வளவு பாவங்கள் செய்துள்ளது மாநில கட்சிகள். திராவிட கட்சிகளின் தகிடுதத்த அரசியலை தமிழக மக்கள் கேட்க வேண்டாம். காவிரி விவகாரத்தில் 44 வருடங்கள் ஆகியிருக்கும் 40 நாட்களில் ஒன்னும் குடி முழுகாது.

முழு நியாயம்
40 நாட்கள் அவகாசம் கேட்டதற்கு கலவர பூமியாக்குவதா?. 40 நாட்கள் காத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது. நிச்சயமாக தமிழகத்துக்கு முழு நியாயம் வழங்கப்படும் என்றார் எச்.ராஜா.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications