ஜீயர் ஸ்வாமியின் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்- எச். ராஜா
ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம் என்று எச். ராஜா டுவீட்டியுள்ளார்.
சென்னை : ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தவறாக விமர்சித்துவிட்டார் என்று முதலில் பிரச்னையை எழுப்பியவர் எச். ராஜா. கவிஞர் வைரமுத்து மீது தரம் தாழ்ந்த விமர்சனத்தையும் அவர்முன் வைத்தார். இந்நிலையில் வைரமுத்து விவகாரம் விஸ்வரூபமெடுக்க இந்து மதத்தினர் பலரும் வைரமுத்து மீது தனி நபர் விமர்சனங்களை தொடுத்தனர்.
வைரமுத்து மீதான விமர்சனங்களுக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே வைரமுத்து ஆண்டாள் சன்னிதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்ற ஜீயர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் என்றார்.
ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம்
— H Raja (@HRajaBJP) January 23, 2018
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இன்று டுவிட்டரில் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம் என்று போராட்டத்தை தூண்டும் விதமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.