For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் கனமழையால் அரையாண்டு தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- ஜெ.
சென்னை: தமிழகத்தில் கனமழையால் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் தற்போதும் பேய்மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கடந்த 3 வாரங்களாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இவை அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English summary
Tamilnadu CM Jayalalithaa has announced that Half yearly exams to all over Tamilnadu schools postponed to January.