இந்தியர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான சுதந்திர தின வாழ்த்துக்கள்: ரோசைய்யா
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று நாளை உரையாற்றுமாறு உள்துறை அமைச்சகம் அவரை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ரோசைய்யா நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
‘‘இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' இந்திய குடிமகனாக இருப்பதற்கு நாம் பெருமைப்படுகிறோம். நமது தேசிய கட்டமைப்பு மற்றும் ஒருமைப்பாடு உலக அளவில் தலைமை தாங்க வழிவகுக்கும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications