சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் தர்மம் வென்றது என்று பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகருமான எஸ்.வீ. சேகர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எஸ்.வீ. சேகர் பதிவு செய்துள்ளதாவது:
தர்மம் வென்றது.
சட்டம் கடமையை செய்தது.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என்று எஸ்.வீ. சேகர் பதிவு செய்திருக்கிறார்.