7வயது சிறுமி பலாத்காரம் செய்து எரித்து கொலை - கொலையாளியை தூக்கில் போடக்கோரி மறியல்
சென்னையில் 7 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த காமுகனுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை: போரூர் அருகே அடுக்குமாடு குடியிருப்பில் வசிக்கும் பாபு-ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த மாயமானார். சிறுமி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு சிசிடிவி ஆதாரம் சிக்கியது.
அதை வைத்து கொலையாளியை போலீசார் மடக்கினர்.அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 7 வயது இளம் பிஞ்சை பலாத்காரம் செய்ததோடு எரித்து கொன்ற காமுகனுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போரூர் அடுத்த மாதா நகரில் திரண்ட அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கொலையாளி தஷ்விந்துக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என தெரிவித்த அப்பெண்கள் கொலையாளிக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக குரல் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications