சிவாஜி சிலையை அகற்ற தடைகோரி மனு - தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு
சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், பல விபத்துகளுக்கு காரணமாக உள்ளதாகவும் கூறி, அந்த சிலையை அகற்ற பொது நலவழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தைக் கேட்டது உயர்நீதிமன்றம். தமிழக அரசும், சிலையை அகற்றலாம் என கருத்து தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இந்த சிலையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்றுமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றினாலும், வேறு ஒரு இடத்தில் வைக்கப் போவதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சிவாஜி நலப் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன், சிவாஜி சிலையை அகற்றும் உத்தரவுக்கு தடைகோரி இன்று மனு சமர்ப்பித்தார்.
இதனை நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் சசிதரன் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், சிலையை அகற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டனர் நீதிபதிகள்.