போலி கையெழுத்து: சசிகலா புஷ்பாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
மதுரை: முன்ஜாமீன் வக்காலத்தில் சசிகலா புஷ்பா போலி கையெழுத்திட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற்த்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண்கள் பானுமதி, ஜான்சி ஆகியோர் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்திருந்தனர். அதில் நிர்வாண மசாஜ் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலில் முன் ஜாமீன் கோரினார் சசிகலா புஷ்பா.

டூப்ளிகேட் கையெழுத்து
டெல்லி உயர்நீதிமன்ற அறிவுரைப்படி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணையின் போது, வெளிநாட்டில் உள்ள சசிகலா புஷ்பா, முன்ஜாமீன் வக்காலத்தில் மதுரையில் வழக்கறிஞர் முன் எப்படி கையெழுத்திட முடியும்? அவருக்கு பதிலாக யாரோ போலி கையெழுத்திட்டுள்ளனர் என அரசுத் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

கோர்ட் கேள்வி
இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் கடந்த மாதம் 29-ந் தேதி நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஆஜாரானர்.

விளக்கம்
அப்போது தாம் டெல்லியில் இருந்து முன்ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து போட்டு கணவரிடம் கொடுத்தனுப்பினேன் என விளக்கம் அளித்தார்.
இதன்பின்னர் இவ்வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்ய உத்தரவு
இந்த நிலையில் இன்று சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் போலி கையெழுத்து விவகாரத்தில் சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கவும் போலீசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications