காணாமல் போன குழந்தைகள் வழக்கு: 4 மாதத்துக்குள் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: காணாமல் போன குழந்தைகள் தொடர்பான வழக்கில் 4 மாதத்துக்குள் இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
காணாமல் போன குழந்தைகள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதி நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் காணாமல் போன 47 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 4 மாதத்துக்குள் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை காணமாமல் போன குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சமும், 5 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை காணமாமல் போன குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூபாய் 2 லட்சமும்,
7 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போன குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூபாய் 3 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. இதனை நேரில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செப்டம்பர் 20-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அன்றைய தினம் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications