நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கின்றன : முத்தரசன், விஜயகாந்த் கேள்வி
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கின்றன என்று முத்தரசன், விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை என்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய ஆடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளுநர் அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லையென்றும் தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

ஆளுநர் மீது சந்தேகம்
இதுகுறித்து சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி கல்வித்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேசியுள்ளார். அதே சமயம், இச்சம்பவத்தில் ஆளுநர் அவசரமாக விசாரணைக்குழு அமைக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தன்னிலை விளக்கமளிக்கிறார். இப்பிரச்னையில் ஆளுநரே சந்தேகிக்கப்படுகிறார். எனவே, அவரே விசாரணைக்குழு அமைப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.

உயர்நீதிமன்ற நீதிபதி
தமிழகத்தில் இந்த பிரச்னை பல்வேறு கல்லூரிகளில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதே சமயம் காவிரி நதி நீர் பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகங்கள் இழைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

நிர்மலா தேவி பிண்ணனி
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நிர்மலாதேவி அவ்வளவு தைரியமாக செயல்பட்டதன் மூலம் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பின்னணியில் இருக்கிறார்கள் என சந்தேகிக்கத் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் நடவடிக்கை
ஆளுநர் தாமாக முன்வந்து நிர்மலாதேவியை பார்த்ததில்லை என்பது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியை நினைவூட்டுவதாகவும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தொட்டது அநாகரிகத்தின் உச்சகட்டம் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவில் உள்ள ஆளுநரே சந்தேக வளையத்துக்குள் இருப்பதால் நீதிமன்றம் தாமாக முன்வந்து நேர்மையான அதிகாரிகள் மூலம் விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications