For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டம்-ஒழுங்கு: டிராபிக் ராமசாமி கேஸ்- உள்துறை செயலாளருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று ஒருவாரத்திற்கு தெரிவிக்குமாறு டி.ஜி.பி மற்றும் உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறைதண்டனை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையமும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்தனர்.

HC orders issue of notice to Tamil Nadu Home Secretary

அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த மனு விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
The Madras High Court Bench here on Sunday ordered notice to the Secretary of the Home Department on a petition K.R. Ramaswamy alias ‘Traffic’ Ramaswamy, a social activist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X