டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடிவாரண்ட்- போலீசாருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
சென்னை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குட் எதிரான பிடிவாரண் தொடர்பான வழக்கில் சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்னையில் தங்கியிருந்த போது அவரது ஆதரவாளர்களால் 1986-ம் ஆண்டு திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் 1990ஆம் ஆண்டு டக்ளஸ் இலங்கைக்குப் போய்விட்டார். இதனால் 1994ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டார்.
சென்னை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டக்ளஸ் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்மையில் பிடிவாரண்ட் தொடர்பான வழக்கில் தமது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து டக்ளஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீது 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி!












Click it and Unblock the Notifications