லயோலா கல்லூரியில் இட ஒதுக்கீடு தரச் சொன்ன தமிழக அரசின் உத்தரவு ரத்து!
சென்னை: மாணவர்கள் சேர்க்கையில் லயோலா கல்லூரி இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு கத்தோலிக்க சங்கம் சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவில், "லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. கல்லூரி நிர்வாகம் அரசாணையை பின்பற்றவில்லை. எனவே மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற லயோலா கல்லூரிக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில்," சிறுபான்மை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. எனவே லயோலா கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற தேவையில்லை" என்று கூறினர்.












Click it and Unblock the Notifications