ஜாமீனுக்காக சீமை கருவேல மரங்களை வெட்டச் சொல்வது சட்ட விரோதம்- ஹைகோர்ட் 'சுளீர்'
ஜாமீன் வழங்க கருவேல மரங்களை வெட்ட நிபந்தனை விதிப்பது சட்ட விரோதம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் அறிவுறுத்தியுள்ளார்
சென்னை: ஜாமீன் வழங்க கருவேல மரங்களை வெட்ட நிபந்தனை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என கீழ்நீதிமன்றகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிபதிகள் கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஞானம் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் வழக்கில் ஒருவர் தண்டனை பெறும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் மட்டுமே என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் எனவும் நீதிபதி தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜாமீன் கேட்பவர்களை கருவேல மரங்களை வெட்டச் செல்வது மனித உரிமை மீறல் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஜாமீன் கேட்பவர்களை கருவேல மரங்களை வெட்டச் செல்வது சட்ட விரோதம் என்றும் நீதிபதி தேவதாஸ் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை நடைபெறும் போதே தண்டனை அளிக்கும் விதமாக மரங்களை வெட்ச்சொல்வது ஏன் என்றும் நீதிபதி தேவதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் ஜாமீனில் வெளிவருவோர் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 20 நாட்களுக்குள் 100 சீமைக்கருவைகளை அகற்ற அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல கோவில்பட்டி அருகிலுள்ள தீ்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் திருட்டு வழக்கில் கைதானார். ஜாமீன் கேட்டு அவர் இன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி வீரணன், முருகன் ஊரிலுள்ள 25 சீமைக்கருவேல மரங்களை வேறோடு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார்.
ஊடகங்களில் இந்த செய்தி வெளியானது. கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications