கோவில்பட்டி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் மீது வழக்கு
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழத்தோட்ட நகரை சேர்ந்தவர் ராணி. இவர் இலுப்பையூரணியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதையடுத்து பள்ளிக்கு செல்லுமாறு ராணியை அவரது தாயார் வற்புறுத்தியுள்ளார். அப்போது பள்ளிக்கு செல்ல முடியாது என்று கூறிய ராணி, தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் பள்ளியில் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இதற்கு பயந்தே பள்ளிக்கு செல்லவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணனிடம் கூறினார். அவரது தலைமையில் திரண்ட கட்சியினர் மற்றம் பொதுமக்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் சென்ரறு மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது தொடர்பான விசாரணை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் கிருஷ்ணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications