11 மணி நேரம் டிஜிபி ராஜேந்திரன் வீட்டை தோண்டித் துருவிய சிபிஐ.. விஜயபாஸ்கர் வீட்டிலும் தீவிர ரெய்டு!
Recommended Video

சென்னை: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி அதிர வைத்தனர். டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் 11 மணி நேரம் ரெய்டு நடைபெற்றது.
டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் காலை 6.30 மணி முதல் ரெய்டு நடந்தது. அவரை வீட்டுக்குள் முடக்கி வைத்து விட்டு அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட பலரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தியுள்ளது சிபிஐ.
முன்னாள் காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடத்தினர். அவரது வீடு முகப்பேர் அடுத்த நொளம்பூர் பகுதியில் உள்ளது. இவரது வீட்டில் 9 மணி நேரத்திற்கும் மேலாக ரெய்டு நடைபெற்றது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று இரவு 7 மணியளவில் நிறைவுற்றது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.
குட்கா அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையிலும், அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர் கே இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களில் 35 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர்கள் பாண்டியன், சேஷாத்ரி வீடுகளும் ரெய்டுக்குள்ளாகின. விற்பனை வரித்துறை அதிகாரி கணேசன் வீடும் ரெய்டிலிருந்து தப்பவில்லை.
குட்கா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை என்பவரின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
ரெய்டுக்குள்ளான பிறர்:
காவல்துறை துணை ஆணையர் மன்னர் மன்னன், குட்கா உற்பத்தியாளர்கள் மாதவராவ், சீனிவாச ராவ், உமா சங்கர், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், லட்சுமிநாராயணன், மத்திய வரித்துறை அதிகாரி குல்சார் பேகம், விற்பனை வரித்துறை அதிகாரி பன்னீர் செல்வம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications