2 நாளைக்கு தகிக்கப் போகுது தமிழகம்... வெளியே வந்தா வெந்து போயிருவீங்க- எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
சென்னை: தலைநகர் சென்னை மேலும் கொதிக்கப் போகிறது. 100 டிகிரி பாரன்ஹீட் அளவை விட அதிகமாக வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. 28வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆங்காங்கே கோடை மழை கொட்டியதால் வெப்பத்தின் தாக்கம் தெரியவில்லை. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரிக்கும் குறைவாகவே பதிவானது.

இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் 2 நாட்களுக்கும் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வறண்ட வானிலையே நிலவுகிறது என்றும், சென்னையிலும் வெப்பம் 105 டிகிரிவரை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வயதானவர்கள், குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், பத்திரமாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆறுதல் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications