சென்னையில் மீண்டும் 102 டிகிரி வெயில்; மதுரை, திருச்சியில் 105 டிகிரி
சென்னை: சென்னையில் மீண்டும் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை, திருச்சி, தஞ்சை, 105 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் முடிந்தும் கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக திங்கள்கிழமை சென்னையில் வெயில் குறைந்திருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் செவ்வாய்க்கிழமை மீண்டும் சென்னையில் 100 டிகிரி வெயில் பதிவானது.

சென்னையில் தகிப்பு
சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக உயர்ந்துள்ளது. அதனால் அனல்காற்று வீசுகிறது.

மதுரை, திருச்சி
மதுரை, திருச்சி, திண்டுக்கல், சேலம் நகரங்களில் 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பம் இந்தநகரங்களில்தான் பதிவாகியுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை
வெயிலூரான வேலூரிலும், திருவண்ணாமலையிலும் 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

கோவை, திருப்பூர்
அதேசமயம் கோவை, திருப்பூர், உதகமண்டலத்தில் 89.6டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

அனல்காற்று
கத்திரி வெயில் முடிந்த பின்னரும் அனல்காற்றோடு வெயில் கொளுத்திவருவதால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications