வாக்குச்சாவடியில் நடிகை சி.ஆர். சரஸ்வதி, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்
காஞ்சிபுரம்: நடிகையும், பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளருமான சி.ஆர். சரஸ்வதி வாக்குப்பதிவை பார்வையிட சென்றபோது திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் திங்கட்கிழமை பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் நடந்தது முடிந்தது. நடிகை சி.ஆர். சரஸ்வதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் பல்லாவரத்தில் இருக்கும் தெரசா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவை பார்வையிட சென்றார். வாக்குச்சாவடிக்கு முன்பு அவரது கார் நிறுத்தப்பட்டதை பார்த்த திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து இரு கட்சியினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications